search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லடம் விவசாயிகள் போராட்டம்"

    தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுல்தான்பேட்டை, பல்லடத்தில் இன்று 8-வது நாளாக விவசாயிகளின் போராட்டம் நீடிக்கிறது.
    பல்லடம்:

    தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர்மின் கோபுரம் அமைப்பதற்கு எதிப்பு தெரிவித்து விவசாயிகள் கடந்த 17-ந்தேதி முதல் கோவை, திருப்பூர், திண்டுக்கல் விழுப்புரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

    கோவையில் சுல்தான்பேட்டையிலும், திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் கள்ளிப்பாளையத்திலும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

    விவசாயிகள் தூக்கு போட்டு போராட்டம், ஒப்பாரி போராட்டம், கருப்பு துணி கட்டி போராட்டம் என்று தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

    7-வது நாளான நேற்று முதல் விவசாயிகள் சுல்தான்பேட்டை உள்பட அனைத்து காத்திருப்பு போராட்ட மையங்களிலும் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி தஞ்சை விவசாயிகள் சங்க தலைவர் அய்யாகண்ணு முன்னிலையில் காங்கயம் எம்.எல்.ஏ., தனியரசு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

    கோவை சுல்தான்பேட்டையில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க அய்யாகண்ணு, தனியரசு எம்.எல்.ஏ., ஆகியார் மாட்டு வண்டியில் வந்தபோது எடுத்த படம்.

    அப்போது தனியரசு எம்.எல்.ஏ., கூறும்போது, காத்திருப்பு தொடர் போராட்டத்தின் அடுத்த கட்டமாக சென்னையில் மிகப்பெரிய அளவில் நடக்க இருக்கும் அறவழி போராட்டத்தில் தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவையின் பங்களிப்பு இருக்கும் என்றார்.

    கஜா புயலில் எத்தனை லட்சம் மின் கம்பங்கள் சாய்ந்தன. இன்னும் அங்கு சரி செய்ய முடியவில்லை. இதேபோல் நாளை வேறு ஒரு புயல் வந்தால் இப்போது போடப்படும் உயர் மின் கோபுரங்கள் சாயாதா? இப்படி வருடம் ஒரு புயல் வரும் மின்கம்பங்கள் சாயும் இதற்கு கோடிகளில் செலவு ஆகும். விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பூமிக்கு அடியில் மின்சாரம் கொண்டு செல்வதே சிறந்த வழி என்றார்.

    முன்னதாக பிடுங்கப்பட்ட ஒரு தென்னை மரத்தை போட்டு பெண்கள் ஒப்பாரி போராட்டம் நடத்தினர்.

    போராட்ட பந்தலின் முன்பு காய்கறிகளை கட்டி தொங்க விட்டு இருந்தனர்.

    காத்திருப்பு தொடர் போராட்டத்தின் 7-வது நாளான நேற்று உழைப்பாளர் கட்சி மாநிலத் தலைவர் செல்லமுத்து, தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், மாவட்ட செயலாளர் குமார், உழவர் உழைப்பாளர் கட்சி மாவட்ட இளைஞரணி தலைவர் சோமசுந்தரம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் ஈஸ்வரன் உள்பட ஏராளமானனோர் கலந்து கொண்டனர். 8-வது நாளாக இன்றும் போராட்டம் நடக்கிறது. இதில் 2-வது நாளாக உண்ணாவிரத போராட்டம் நீடிக்கிறது.
    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பிரச்சினையை தீர்க்காவிட்டால் தே.மு.தி.க. சார்பில் மாபெரும் போராட்டம் நடத்தப்படும் என்று எல்கே சுதீஷ் பேசினார். #lksudhish #dmdk #farmersstruggle

    சூலூர்:

    விவசாய நிலத்தில் மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 17-ந்தேதி முதல் காத்திருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டையில் 5-வது நாளாக பல்வேறு கட்டமாக போராட்டம் நீடிக்கிறது.

    விவசாயிகள் போராட்டதுக்கு ஆதரவு தெரிவிக்க நேற்று தே.மு.தி.க. மாநில துணை பொது செயலாளர் எல்.கே.சுதீஷ் சுல்தான் பேட்டை வந்தார். போராட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:- விவசாயிகளின் பிரச்சினை பற்றி கவலைப்படாத முதல்- அமைச்சரும், பிரதமரும் உள்ளனர்.

    பெட்ரோல், டீசல், கியாஸ் ஆகியவை நிலத்தடியில் மூலம் செல்லும் போது மின்சாரத்தை கேபிள் மூலம் கொண்டு செல்ல முடியாதா? விவசாய நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைத்தால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும்.

    உயர் மின் கோபுரங்களால் ஏற்கனவே 13 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. உயர் மின் கோபுர பிரச்சினையை உடனடியாக தீர்க்க விடில் ஜல்லிக்கட்டு போராட்டம் மற்றும் ஸ்டெர்லைட் போராட்டம் போல் தமிழக அரசையும், மத்திய அரசையும் கண்டித்து விஜயகாந்த் தலைமையில் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ, பனப்பட்டி தினகரன், மாவட்ட செயலாளர்கள் காட்டன் செந்தில்இ தியாகராஜன், எஸ்.எம். முருகன் மற்றும் மாவட்ட துணை செயலர்கள் ஒன்றிய நகர ஊராட்சி செயலாளர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் போராட்டத்தில் கலந்து கொண்டனர். #lksudhish #dmdk #farmersstruggle 

    கோவை-திருப்பூரில் உயர் மின் கோபுரம் அமைப்பதை எதிர்த்து விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர். #FarmersProtest
    பல்லடம்:

    தமிழகத்தில் விளை நிலங்களின் வழியாக மின் கோபுர பாதை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து இன்று முதல் (திங்கட்கிழமை) 8 இடங்களில் விவசாயிகளின் காத்திருப்பு தொடர் போராட்டம் தொடங்கியது.

    திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம் தாராபுரம் சாலையில் உள்ள வே.கள்ளிப்பாளையத்தில் இன்று காலை 5 ஆயிரம் விவசாயிகள் பங்கேற்று காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினர்.

    இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் கொங்கு ராஜாமணி கூறியதாவது:-

    மத்திய அரசின் பவர் கிரிட் நிறுவனம், தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழகம் ஆகியவை கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், கரூர், திண்டுக்கல், திருச்சி சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய 13 மாவட்டங்களில் 12 உயர் மின் கோபுரங்கள் பாதை மின் திட்டங்கள் மூலம் 2.50 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் விளை நிலங்களின் வழியாக மின் கோபுரங்களை நிறுவும் பணி மேற்கொண்டுள்ளது.

    தற்போது இப்பணியால் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதித்துள்ளனர். கேரளாவில் சாலையோரம் கேபிள் வழியாகவும், அதேபோல் மதுரையிலிருந்து இலங்கையின் புது அனுராதாபுரத்திற்கும் கேபிள் வழியாகவும் மின்சாரம் கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்தவுள்ளனர். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் இது போன்ற திட்டங்கள் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

    தமிழகத்தில் விவசாய விளை நிலங்களின் வழியாக உயர் மின் கோபுர பாதை அமைத்து மின்சாரம் கொண்டு சென்றால் விவசாயிகளின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்படும். கேரளாவில் உள்ளதை போல் சாலையோரம் கேபிள் மூலம் தமிழகத்திலும் மின்சாரப் பாதை அமைத்து கொண்டு செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டையில் கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில பொருளாளர் டாக்டர் தங்கராஜ் தலைமையில் இன்று காத்திருப்பு போராட்டம் தொடங்கியது. #FarmersProtest
    ×